தாய்மைப் பேறு (#11400)

என் பிரபுவே! என் பிரபுவே! உமது இத்தாழ்மையான பணிப்பெண்ணின்பால், உம்மை மன்றாடிப் பணிவாக வேண்டிடும் உமது இவ்வடிமையின்பால், நீர்   அருள் பொழிந்தமைக்காக நான் உம்மைப் போற்றுகின்றேன், உமக்கு நன்றி கூறுகின்றேன்; ஏனெனில், நீர், மெய்யாகவே அவளை உமது தெளிவான இராஜ்யத்தின்பால் வழிநடத்திச் சென்று, இவ்வநித்திய உலகில் அவளை  உமது  மேன்மையான அழைப்பினைச் செவிமடுக்கச் செய்து, சகலத்திலும் உமது வெற்றியான அரசாட்சியின் தோற்றத்தை நிரூபித்திடும் உமது அடையாளங்களைக் கண்ணுறவும் செய்துள்ளீர். 

என் பிரபுவே, என் கருவிலிருக்கும் அதனை உமக்கே அர்ப்பணிக்கின்றேன். ஆகவே, அதனை, நீர், உமது இராஜ்யத்தில் ஒரு போற்றுதலுக்குரிய குழந்தையாகவும், அது, உமது தயை, தாராளத்தன்மை ஆகியவற்றினால் அதிர்ஷ்ட-சாலியாகி, உமது கல்வி என்னும் பொறுப்பின்கீழ் விருத்தியடைந்து வளர்ந்திடுமாக. 

மெய்யாகவே, நீரே அருள் மிகுந்தவர்! மெய்யாகவே, நீரே பெரும் தயையின் பிரபுவானவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

